

ஈழத்தில் நம் தமிழர்கள்
ஒரு லட்சம் பேர் ஒரே
நாளில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசு செய்தது
என்று இதை ஒதுக்க முடியாது.
இக்கொடும் காரியத்தை
இந்தியா தான் செய்தது.
போரின் ஆரம்ப கட்டத்திலிருந்து
இதுவரை மூன்று லட்சம்
தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று லட்சம் தமிழ்
மக்கள் வதை முகாம்களில்
கொடுமைப்படுத்தப்பட்டு
வருகிறார்கள். இது முழுக்க
இந்தியா அரசின் ஒப்புதலுடன்
நடந்து வருகிறது. இன்று
வரை அங்கு தமிழருக்கு
ஒரு தீர்வை வையுங்கள்
என இந்தியா இலங்கையை
நிர்பந்திக்கவில்லை.
காரணம் நமக்கு புரிகிறது. தமிழனுக்கு
அங்கு தீர்வோ,, நியாயமோ, சோறோ,
நீரோ தரப்படுவதை இந்தியாவே
விரும்பவில்லை. நாம்
இது நாள் வரை இந்தியாவை நம்
நாடு என்று நம்பி வந்து
இருக்கிறோம். ஆனால் இந்தியா
என்பது 'இந்தி' க்காரனுக்கு
மட்டும்தான் என்று நமக்கு
சொல்லப்பட்டாகி விட்டது.
இதற்கு பின்னாலும் நாம்
இந்தியா நம் நாடு என
முழு மனதுடன் சொல்ல இயலவில்லை.
துக்கமல்ல, வெட்கமாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான்
தன் வயிற்று பாட்டுக்காக
'ஜெய்ஹோ' பாடலாம். நமக்கென்ன
இருக்கிறது? இந்தியா
நம் நாடல்ல. இந்தியாவை
இத்தனை நாள் எப்படியெல்லாம்
போற்றினோம்? அதே போல்
இனி தூற்றவும் நமக்கு
உரிமை உள்ளது. ஆகவே இனி
இந்தியப் பழிப்பு கதைகளை
இங்கே இயற்றுவோமாக........
|

சுக்காரொட்டி தின்கிற
இந்திகாரனுக்கு மட்டும்
தான் சொந்தம் போல
இந்த இந்தியா !
|
கடவுள்ள்ள்ளே!கடவுளே!
ஒரு இந்தியன் ஒரு
அமெரிக்கன் ஒரு ரஷ்யன்
ஆகியோர் ஒன்றாக இருக்கும்
போது கடவுள் அவர்கள்
எதிரில் தோன்றினாராம்.
'என்ன வரம் உங்களுக்கு
வேண்டும், கேளுங்கள்'
என்றாராம். அமெரிக்கன்
, 'எங்கள் அமெரிக்க நாடு
எப்போது மிக வல்லமை பெற்று
விளங்கும், எனக்கு கூறுங்கள்'
என்று கேட்டானாம். . அதற்கு
கடவுள் 'இன்னும் நூறு
ஆண்டுகள் ஆகும்' என்றாராம்.
அதற்கு அமெரிக்கன் அழுது
போய் சொன்னானாம், 'அதை
காண நான் அத்தனை காலம்
உயிரோடு இருக்க மாட்டேனே'
என்று. அடுத்து ரஷ்யன்
கேட்டானாம் அதே கேள்வியை.
அதற்கு கடவுள் 'உன் நாடு
வல்லமை பெற நூற்று இருபத்தைந்து ஆண்டுகள்
ஆண்டுகள் ஆகலாம்' என்றாராம்.
உடனே ரஷ்யன் 'ஐயோ நானும் அதை
காண உயிரோடு இருக்க மாட்டேனே' என
பெருங்குரலெடுத்து அழத்
தொடங்கி விட்டானாம். அடுத்து
இந்தியன் கேட்டானாம்,
'என் இந்தியா இந்த பூவுலகில், பெரும்
வல்லமைப் பெற எத்தனை
ஆண்டுகள் ஆகும்' என்று
கேட்டானாம். உடனே கடவுள்
ஓ' வென்று அழுவ ஆரம்பித்து
சொன்னாராம், 'நானே அத்தனை
ஆண்டுகள் உயிரோடு இருக்க
மாட்டேனே ' என்று.
|

சிங்கமும்
அசிங்கமும்
சேர்ந்து பார்க்க
அசிங்கமாக
அல்லவா
இருக்கிறது !
|
பாதக மாதா! பேரறிஞர்
அண்ணா தமிழக முதலமைச்சராய்
இருந்த போது, தமிழக சட்டசபையில்
ஒரு காங்கிரஸ்காரன்
கிண்டலாக கேட்டானாம்,"தமிழ்
அன்னை தமிழ் அன்னை என்று
சொல்லுகிறீர்களே, அவள்
எங்கே இருக்கிறாள் ?'" என்று.
அதற்கு அண்ணா , " நீங்கள்
பாரத மாதா, பாரத மாதா என்று
சொல்லுகிறீர்களே, அவள்
வீட்டுக்கு பக்கத்துக்கு
வீடு", என்று சொல்ல, கேள்விக்
கேட்ட அந்த காங்கிரஸ்காரன்
மானம் போய் விட்டதாம்.
இங்கு ஒரு தகவல்:
தமிழ் நாட்டில் வாழ்ந்துக்
கொண்டு தமிழ் மக்களின்
ஓட்டு வாங்கி ஜெயிக்கிற
காங்கிரஸ்காரன் தமிழை
கிண்டல் செய் கிறான்
நாம்தான் வெட்கம் கெட்டு
கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அது சரி,
அந்த பாரதமாதா
இந்தியாவின் தேசிய விலங்கான
புலியுடன் தானே இந்த
படத்தில் இருக்க வேண்டும்?
அவள் ஏன் சிங்கத்துடன்
இருக்கிறாள்? ஓ ! அவள் சிங்களவனுடன்
கள்ள உறவு வைத்து இருப்பதை
சிம்பாலிக்காக காட்டுகிறாளோ
என்னவோ !
|

|
(வி)மானம் பறக்குதே!
ஒரு விமானம் ஒன்று பறந்துக்
கொண்டு இருந்தது. சுகமான
பயணம். திடீரென்று விமானம்
குலுங்கியது. மேலும்
கீழுமாய் தூக்கி வாரி
போட்டது. பயணிகள் அலறினர்.
பதறினர். என்ன நடக்கிறது
என்று யாருக்கும் புரியவில்லை.
அப்போது ஒலிப் பெருக்கியின்
ஊடாக. விமானியின் குரல்.
"அருமைப் பயணிகளே, ஒரு
பெருந்தவறு நேர்ந்து
விட்டது. விமானத்தில்
ஏற்றப்பட வேண்டிய எடையை
காட்டிலும் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளது
. விமானத்தை ஒரு நிலைக்கு
கொண்டு வர முடியவில்லை.
விமானத்தின் எடையை உடனடியாக
குறைத்தாலே தவிர இந்த
விமானம் பத்திரமாக போய்
சேரும் என்கிற நம்பிக்கையும்
இல்லை. ஆகவே, யாராவது
ஒரு மூன்று பேர் விமானத்தில்
இருந்து கீழே குதித்து
விட்டால் தவிர மற்றவர்கள
காப்பாற்றுவதில் எந்த
சிரமமும் இருக்காது.
இல்லையேல் அனைவரும் கடலில்
விழ வேண்டியது தான். இப்போது
நாம் சிந்திக்க வேண்டியது,
இறக்க போவது மூவரா இல்லை
அனைவருமா என்பதை தான்.
யாராவது ஒரு மூன்று பேர்
தங்கள் உயிரை தியாகம்
செய்யுங்கள்". செய்திக்
கேட்டதும், பயணிகள் 'அல்லா"
, "ஏசுவே" " சிவனே" என்றெல்லாம்
அலறினர் ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
யாராவது மூன்று பேர்
குதியுங்களேன் எங்களை
காப்பாற்றுங்களேன் என்பது
போல் இங்கும் அங்கும்
பார்த்தனர். உயிரை விட
யார் துணிவர்? மீண்டும்
விமானியின் குரல், "சீக்கிரம்,
உடனே முடிவெடுங்கள்,
விமானம் நேரம் செல்ல
செல்ல தாழப் போய் கொண்டு
இருக்கிறது, சீக்கிரம்
, யாராவது மூன்று பேர்
குதியுங்கள், இல்லையேல்
அனைவருமே சாக வேண்டியது
தான்". விமானத்தில் ஒரு
அமெரிக்கனும் இருந்தான்,
அவன் சட்டென்று எழுந்தான்.
"இங்கு என்னுடன் பயணம்
செய்யும் என் ஏனைய நாட்டு
சகோதரர்களின் பொருட்டு
என் உயிரை நான் தர பெருமைப்
படுகிறேன். வாழ்க அமெரிக்கா",
என்று தன் நாட்டு தேசியகீதத்தை
உரக்க முழங்கி விட்டு
கதவை திறந்து கொண்டு
குதித்து விட்டான். விமானி
" இன்னும் இருவர், இன்னும்
இருவர், சீக்கிரம் விமானம்
கட்டுப்பாட்டை இழந்துக்
கொண்டு இருக்கிறது,
சீக்கிரம்" என்று கத்தினார்.
ஒரு ரஷ்யனும் இருந்தான்
அவர்கள் மத்தியில். அவன்
எழுந்தான். " என் ரஷ்யா
உலகுக்காக தன்னையே கொடுக்கும்,
என் உயிரையா கொடுக்காது
உங்களுக்கு," என சொல்லிவிட்டு
தன தேசியகீதத்தை உரக்க
பாடி விட்டு ஏற்கனவே
திறந்திருந்த கதவை நோக்கி
நடந்து திரும்பி பாராமல்
குதித்து விட்டான். மீண்டும்,
விமானியின் குரல், " அடுத்து
ஒருவர், சீக்கிரம், இதோ
இருவர், தங்களை தந்து
விட்டார்கள், அவர்களின்
உயிர் தியாகம் வீணாகி
விடக் கூடாது என்றால்
இன்னொருவர் சீக்கிரம்
தங்களை அர்ப்பணித்துக்
கொள்ளுங்கள், சீக்கிரம்,
நேரம் கடந்துக் கொண்டு
இருக்கிறது". அந்த பயணிகள்
கூட்டதிலிருந்து ஒரு
இந்தியன் எழுந்தான்,
"என் இந்தியா எதுவும்
செய்யும், நானும் என்
நாட்டுக்காக ஒரு உயிரை
தரவும் தயங்க மாட்டேன்,
வாழ்ழ்க இந்தியா " என்றுகத்தி
விட்டு தேசிய கீதத்தை
முன்னவர்களை போலவே முழங்கி
விட்டு தன்னை பார்த்துக்
கொண்டு தன் பக்கத்தில்
இருந்தவனை பிடித்து தள்ளி
விட்டு விட்டான்.
|

|
மேல்மாடி காலி!
ஒரு இந்தியன் இங்கிலாந்து
நாட்டுக்கு சென்று இருந்தானாம். அங்கே கடைத்தெருவில்
"மனித உடல் பாகங்கள்
விற்பனை மற்றும் மருத்துவம் " என்று
பலகை வைக்கப்பட்ட ஒரு
கடை இருந்ததாம். இந்தியன்
வெகு ஆச்சர்யத்துடன்
அந்த கடைக்குள் நுழைந்தானாம்.
கடையின் உள்ளே மனிதனின்
உடல் பாகங்கள் கைகள்,
கால்கள், கண்கள் , காதுகள்,
மூக்குகள் என வெளிபாகங்கள்
மட்டுமன்றி உள்உறுப்புக்களான நரம்புகள்,
எலும்புகள், மூளைகள்,
இதயங்கள், போன்றவையும்
அடுக்கி வைக்கப்பட்டு
இருந்தனவாம். இந்தியன்
கடைக்காரனை கேட்டான்,
"இவையெல்லாம், எதற்கு"
என. கடைக்காரன் சொன்னான்,
"விபத்துக்களிலோ அல்லது
வேறு வகைகளிலோ தங்கள்
உடல் உறுப்புக்களை இழந்தவர்கள்,
இங்கு வந்து வேறு உறுப்புக்களை
வாங்கி பொருத்திக் கொள்ளலாம்,
ஊனமற்ற சமுதாயம் படைப்பதே
இன்றைய மருத்துவத்தின்
நோக்கமல்லவா? ". அதைக்
கேட்டுக் கொண்டே கடையின்
அனைத்து பகுதிகளையும்
வெகு ஆர்வத்துடன் பார்த்து
வந்த இந்தியன் மூளைகள்
வைக்கப்பட்டு இருக்கும்
இடத்துக்கு வந்தான்.
அங்கு அமெரிக்க மூளைகள்.
ரஷ்ய மூளைகள் ஜெர்மானிய மூளைகள்
என பலதரப்பட்ட மூளைகள்
இருந்தன. அவற்றின் மேல்
விலைகளும் குறிக்கப்பட்டு
இருந்தன. இந்தியன் ஒரு
மூளையை கையில் எடுத்து,"இதன்
விலை என்ன?" என்று விசாரித்தான்.
கடைக்காரன் சொன்னான்,
"இது அமெரிக்க மூளை, இதன்
விலை ஐம்பது ருபாய்" . "அது
என்ன விலை?" என்று இன்னொரு
மூளையை கை காட்டினான்
இந்தியன். அது ரஷ்ய மூளை
அதன் விலை நாற்பது ரூபாய்".
இந்தியன் கேட்டானாம்,
"இந்திய மூளைகள் இருகின்றனவா?
இருந்தால் அவற்றின் விலை
என்ன?" என்று. " இந்திய மூளைகளும்
எங்களிடம் உண்டு. அவற்றின்
விலை நான்கு லட்சங்கள்
" இந்தியனுக்கு ஒரே ஆச்சரியமாக
போய் விட்டது. "என்ன, இந்திய
மூளைகள் நான்கு லட்சங்களா?
எனக்கு என்ன சொல்வதென்றே
தெரியவில்லை, ஒரு இந்தியனாக
நான் மிகவும் பெருமைப் படுகிறேன்,
இந்திய மூளைகள் ஏன் அத்தனை
விலை, எனக்கு கொஞ்சம்
விளக்க முடியுமா?" கடைக்காரன்
சொன்னான்,"ஐந்து ரஷ்ய
மண்டைகளை உடைத்தால்,
அதில் நான்கு நல்ல மூளைகள்
கிடைத்து விடுகின்றன,
அதுவே அமெரிக்க மண்டைகளாய்
இருந்தால் மூன்று நல்ல
மூளைகள் தேறிவிடுகின்றன.
ஆனால் ஒரு பத்து லட்சம்
இந்திய மண்டைகளை உடைத்தால்தான்
அபூர்வமாக ஒரு நல்ல மூளை
தேறுகிறது,அதுதான் காரணம்"
என்றான்.
|

|
அவனா நீயி!!! காலை
6 .00 மணி. அன்று ஜெர்மன்
நாடு ஒரு ராக்கெட் ஒன்றை
விண்ணில் ஏவத் தயாராயிருந்தது.
தெளிந்த வானம். விஞ்ஞானிகள்
பரபரப்பாய் இருந்தார்கள்.
பல நாட்டிலும் இருந்து
பார்வையாளர்கள் வந்து,
பாதுகாப்பான இருந்துக்
கொண்டு ராக்கெட் விண்ணில்
ஏவப்படும் காட்சியை காணக்
காத்துக் கிடந்தார்கள்.
ராக்கெட்டின் பற்ற வைக்கப்
பட்டு விட்டது. திரி
இதோ கவுன்ட் டௌன் தொடங்கி
விட்டது. 10....9....8....7...6.....5....4....3....2...1...0...........ஐயோ..
ராக்கெட் கிளம்பவே இல்லை.
அப்படியே நின்றுக் கொண்டு
இருந்தது. விஞ்ஞானிகள்
திகைத்தார்கள். என்ன
செய்வது என்று தெரியாமல்
தைகள் கம்ப்யூட்டரில்
பல விதமான ஆணைகளை இட்டார்கள்.
ராக்கெட் கிளம்பவே இல்லை.
மக்கள் பெரும் ஏமாற்றம்
அடைந்தார்கள். விஞ்ஞானிகளோ
கையை பிசைந்துக் கிடந்தார்கள்.
தங்களின் அரசாங்கத்திற்கு
என்ன பதில் சொல்வது
என்று கலக்கம் அடைந்தார்கள்.
அப்போது பார்வையாளர்களில்
ஒரு அமெரிக்கன் இருந்தான்.
அவன் ஜெர்மன் விஞ்ஞானிகளிடம்
வந்து, "நான் அமெரிக்க
நாஸாவில் வேலை செய்கிறேன்,
நான் உங்களுக்கு உதவ
முடியுமா?" என்று கேட்டான்.
ஜெர்மன் விஞ்ஞானிகளோ
யார் வந்து உதவினாலும்
அதை ஏற்றுக் கொள்ளும்
மன நிலையில் இருந்தார்கள்.
" மகிழ்ச்சி, எதாவது செய்யுங்கள்
" என்றார்கள். அமெரிக்கன்
கம்ப்யூட்டரில் என்னெனவோ
செய்தான். கடைசியில்
உதட்டை பிதுக்கினான்.
ரஷ்யன் ஒருவனும் இருந்தான்,
அந்த பார்வையாளர்கள்
மததியில். அவன் வந்து,
" நான் ரஷ்ய விண்வெளிக்
கூடத்தில் வேலை செய்கிறேன்,
பெருத்த அனுபவமுடையவன்,
நான் உங்களுக்கு உதவக்
காத்திருக்கிறேன்" என்றான்.
பின்பு அவனும் எநேனவோ
தனக்கு தெரிந்ததை எல்லாம்
செய்து பார்த்தான். ம்ஹூம்
... தலையை தொங்க போட்டு விட்டான்.
ஒரு கும்பல் வேடிக்கைப்
பார்க்கிறது என்றால்
அங்கே ஒரு இந்தியன்
நிச்சயம் இருப்பானல்லவா
! அவன் வந்தான். " நான் உங்களுக்கு......"
என்று சொல்லுவதற்குள்
ஜெர்மன் விஞ்ஞானிகள்
,"பிறகு சொலுங்கள், இப்போது
எங்களுக்கு உதவுங்கள்,
இன்றைய தெளிந்த வானிலை
எங்களுக்கு கிடைக்க இன்னும்
பல மாதங்கள் ஆகும், இன்றைக்கு
இந்த ராக்கெட்டை ஏவ வில்லையானால்
பிறகு இதை சரி செய்தாலும்
ஏவ பல மாதங்கள் காத்திருக்க
வேண்டி இருக்கும், அகவே
எங்களுக்கு விரைந்து
உதவுங்கள்" என்று சொன்னார்கள்.
மற்ற அமெரிக்க ரஷ்யன்
செய்தது போல் இந்தியன்
கம்ப்யூட்டர் அருகேயே
செல்லவில்லை. ராக்கெட்
நிறுத்தியிருந்த தளத்திற்கு
வந்தான். ராக்கெட்டை
அண்ணாந்து பார்த்தான்.
ஒரு முறை சுற்றி வந்தான்.
பின்பு, ஜெர்மானியரைப்
பார்த்து " நான் சொல்வதுப்
போல செய்யுங்கள்" என்றான்.
ஜெர்மானியர் எதுவும்
செய்ய தயாரயிருந்தார்களே."
சொல்லுங்கள் , நாங்கள்
என்ன செய்ய வேண்டும்?"
என்றார்கள். " ம் ,,, இந்த
ராக்கெட்டை வலப்புறமாக
நன்கு சாயுங்கள்" என்றான்
இந்தியன். ஜெர்மன் விஞ்ஞானிகள்
என்னடாஇது என்று திகைத்துப்
போனாலும் அப்படி யே செய்தார்கள்.
" இன்னொருமுறை அதேபோல்
கொஞ்சம் வேகமாக சாய்த்து
சட்டென நிமிர்த்துங்கள்,
ம் ....செய்தீர்களா இன்னொரு
முறை மெதுவாக சாய்த்து
நிமிர்த்துங்கள், அதே
போல் இடப்புறமாக இப்போது
சாய்த்து நிமிர்த்தி,
வலப்புறமாக கொண்டு சாய்த்து
சடன நிமிர்த்துங்கள்"
என்றான். ஜெர்மன் விஞ்ஞானிகள்
திருதிரு வென விழித்தாலும்
அப்படியே செய்தார்கள்.
செய்து விட்டு இந்திய
முகத்தை ஒப்பத்துக் கிடந்தார்கள்.
இந்தியன் "என்ன பார்க்கிறீர்கள்,
இப்போது பற்ற வையுங்கள்,
ராக்கெட்டை " என்றான்
ஜெர்மன் விஞ்ஞானிகளும்,
உடனே ராக்கெட்டை பற்ற
வைத்து கவுன்ட் டௌன்
தொடங்கினார்கள் 10 ...9 ....என்று
சொல்லுவதற்குள் ராக்கெட்
கிளம்பியே விட்டது. நம்பவே
முடியவில்லை எவராலும்.
விண்ணை தாண்டி போய் போயே
விட்டது. இந்தியனை எல்லோரும்
சூழ்ந்துக் கொண்டார்கள்.
தலைக்கு மேல் தூக்கிக்
கொண்டார்கள். கொண்டாடினார்கள்.
அப்புறம், இறக்கி விட்டு
கேட்டார்கள், "நீங்கள்
யார், என்னவாக இருக்கிறீர்கள்?"
இந்தியன் சொன்னான், "நான்
ஒரு பரோட்டா கடையில்
மாவு பிசைகிறேன்" என்று.
விஞ்ஞானிகள் வியந்துப்
போனார்கள். இந்தியாவில்
பரோட்டா பிசைகிறவனுக்கும்
ராக்கெட் அறிவா? மேலும்
கேட்டார்கள்," எப்படி
எங்கள் ராக்கெட்டின்
தொழில் நுட்ப கொலரை அவ்வளவு சீக்கிரம்
பார்த்ததும் கண்டுப்
பிடித்தீர்கள்?" . இந்தியன்
சொன்னான், 'அது ஒன்னும் பெருசு இல்லீங்க ,
எங்க ஊருல மோட்டார் பைக் கிளம்புலேனா இப்படி
தான் சாச்சி சாச்சி கிளப்புவோம்".
|

|
என்ன கொடுமை சார் இது?
இந்திய பிரதமர் மன்மோகன்
சிங் ஒரு முறை காங்கோ தேசத்துக்கு
போய் இருந்தார். அங்கே உலக
பொருளாதார மாநாடு மற்றும் அகில
உலக தலைவர்கள் சந்திப்பு மற்றும்
மூன்றாம் உலக மாதிரி
திட்டங்களை வடிவமைப்பது போன்ற கருத்தரங்கங்கள் நடக்க இருந்தன. எல்லாம்
நடந்து முடிந்த ஒரு மாலை
அவர் தன்னுடைய ஓட்டலுக்கு
திரும்பிக் கொண்டு இருந்தார்.
அவர் வந்த காரிலேயே பத்திரிகையாளர்
சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது. ஒரு நிருபர்
கேட்டார்," சிங் அவர்களே,
உங்கள் பொருளாதார சீர்திருத்தம்
என்பது பணக்காரன் மேலும் பணக்காரன் ஆக வழி
செய்வது போல தான் உள்ளதே
தவிர இதில் ஏழைகளுக்கென்று
எதுவும் திட்டமில்லையே ,
ஏழைகள் மேலும் ஏழைகளாக
தானே ஆகிக்கொண்டு இருக்கிறார்கள் "
என்று கேட்டு விட, மன்மோகன்சிங்குக்கு
கூட மூக்குக்கு கோபம்
வந்து விட்டது. " நீங்கள்
பத்திரிக்கைகள் தான்
இப்படி எல்லாம் உங்கள்
சுயபத்திரிக்கை வியாபார
நோக்கங்களுக்காக எதுவும்
எழுதுகிறீர்கள், உண்மையை
மறைத்து எழுதுகிறீர்கள்,
திரித்து எழுதுகிறீர்கள்,
என் அரசாங்கம் செய்கிற
ஒவ்வொரு விசயமும் ஏழைகளை
உத்தேசித்து தான், செய்யப்
படுகின்றன, மக்கள் என்னை, என் அரசை
புரிந்து வைத்திருக்கிறார்கள்,
அதனால் தான் என்னை இரண்டாவது முறையாக
பிரதமராகவும் ஆக்கி இருக்கிறார்கள்...'
என்றெல்லாம் அவர் கத்திக்
கொண்டே வண்டியின் சன்னல்
வழியே பார்த்த பொழுது
வெளியே காங்கோவின் குடிசைப் பகுதியை
கார் கடந்துக் கொண்டு
இருந்தது. காங்கோ மக்கள்
எண்ணையே காணாத பரட்டை
தலையுடனும் துண்டும்
துணுக்குமான கிழிந்த
உடைகளையும் அணிந்தவர்களாய்
திறந்த வெளிகளில் கும்பல்
கும்பலாக நின்றும் திரிந்துக் கொண்டும்
இருந்தார்கள். சட்டென என்ன
தோன்றியதோ சிங்குக்கு,"டிரைவர்,
காரை நிறுத்துங்க" என்றார்.
கார் நின்றதும், பாதுகாவலர்கள்
பதற பதற கீழே இறங்கிக்
கொண்டு பத்திரிக்கையாளர்களையும்
இறங்க சொன்னார். அவர்களும்
ஒன்றும் புரியாமற் இறங்கினார்கள்.
சிங் மக்களை நோக்கி விறுவிறு
என்று நடக்க தொடங்கினார்.
பாதுகாவலர்களும் பத்திரிகையாளர்களும்
அவரைத் தொடர்ந்தார்கள்.
. நடந்துக் கொண்டே பத்திரிகயாளர்களை
பார்த்து சொன்னார், " என் அரசின்
செயல்பாடுகள் உங்களுக்குதான்
புரியாது, மக்களுக்கு
எப்படி புரிகிறது? என்பதை
நேரில் காணுங்கள்" என்று
சொல்லி விட்டு மக்கள்
கூட்டத்தில் நுழைந்தார்.
பாதுகாவலர்களை பார்த்து
சொன்னார்," இப்போது நான்
இந்த மக்களிடம் பேச வேண்டும்,
சின்னதாக ஒரு மேடை ஏற்பாடு
செய்யுங்கள், நான்கு
மேஜைகளை சேர்த்து போட்டால்
கூட போதும், க்விக்" என்றார்.
ஏற்பாடு செய்யப்பட்டது.
நான் சொல்வதை இவர்களின்
மொழிக்கு மாற்றி சொல்ல ஒரு
மொழி பெயர்ப்பாளர் ஏற்பாடு
செய்யுங்கள் என்றார். சட்டென ஒரு
பாதுகாவலனே சொன்னான்,
" எனக்கு இவர்கள் மொழி
தெரியும், உங்கள் பேச்சை
நான் மொழி பெயர்கிறேன்
" என்றான். அவரை முதுகில்
செல்லமாய் தாடிக் கொடுத்த மன்மோகன்
சிங் மேடையில் ஏறி
கொண்டார். பாதுகாவலர்கள்
மக்களை ஒருங்கு இணைத்தார்கள்.
பிரதமர் ஆரம்பித்தார்,"
எனதருமை காங்கோ மக்களே,
நான் மன்மோகன் சிங், இந்திய பிரதமர்,
உங்கள் தேசத்திற்கு
தற்போது வந்துள்ளேன்"
என்று சொல்லி விட்டு பக்கத்தில் பார்த்தார். பாதுகாவலன்
மொழிப் பெயர்த்தான்.
" உங்களை சந்தித்ததில்
பேரு மகிழ்ச்சி, உங்கள்
நாட்டோடு என் இந்திய
நாடு சில ஒப்பந்தங்களை
செய்துக் கொள்ள முன்
வந்திருக்கிறது". பாதுகாவலன்
மொழிப் பெயர்த்தான்.
மக்கள் ஏதோ கவனமாக பார்ப்பது
போல் பார்த்தார்கள்.
"ஏற்படப் போகும் இந்த
ஒப்பந்தங்களால் உங்கள்
நாடும் எங்கள் நாடும்
பல துறைகளில் ஏற்றம்
பெறப் போகின்றன'" . காவலன்
மொழிப் பெயர்த்தான்.
மக்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள்
இப்போது. " இந்த ஒப்பந்தங்களால்,
நீங்கள் உங்கள் குடிசைகளை
விட்டு மாளிகைகளுக்கு
குடிப் போக போகிறீர்கள்".
மொழிப்பெயர்த்தான். மக்கள்
ஏதோ ஆர்வ மிகுதியால்
தங்களுக்குள்ளாக ஏதோ
பேசிக் கொண்டு லேசான
சலசலப்பு கிளம்பியது.
பிரதமர் தன் கைகளால்
அவர்களை அமர்த்தியப்படி
மேலும் தொடர்ந்தார்," நீங்கள் ஒவ்வொருவரும்
உங்களுக்கான சாலைகளில்
நவீனமான வாகனங்களில்
பறக்கப் போகிறீர்கள்".
மொழிப்பெயர்ப்பு. மக்கள்
இப்போது தங்கள் கைகளை
உயர்த்தி "மலூங்கா, மலூங்கா"
என்றார்கள். " உங்கள் ஒவ்வொருவருக்கும்
ஐந்து இலக்கத்தில் வேலைகள்
தயாராக போகிறது". மொழிப்
பெயர்ப்பு. மக்கள் இன்னும்
உற்சாகமாக, "மலூங்கா, மலூங்கா"
என்று அடித் தொண்டையில்
கத்தினார்கள். "பல லக்ஷம்
பெறுமானமுள்ள நிலங்களும்,
வங்கி கணக்குகளும் உங்களுடையதாக
போகின்றன" இப்போது அந்த
பாதுகாவலன் மொழிப் பெயர்க்க
தேவை படவில்லை. மக்களே
பிரதமர் பேச்சு தங்களுக்கு
நேரடியா புரிந்து விட்டதைப்
போல "மலூங்கா, மலூங்கா"
என்று கத்தினார்கள்.
பிரதமர் ஏதோ புரிந்தவரை
போல பதிரிக்கையாளர்களை பார்த்தார்.
மேலும் தொடர்ந்து," நீங்கள்
ஒவ்வொருவரும் சமுதாயத்தின்
அடையாளங்களாக மாறப் போகிறீர்கள்".
மொழிப்பெயர்ப்பு தேவைப்படவேவில்லை.
மக்கள் "மலூங்கா, மலூங்கா
" என்று கதறினார்கள். பிரதமர் பத்திரிக்கையாளர்கள்
பக்கம் திரும்பி புருவத்தை
உயர்த்தி அவர்களை கேலி
செய்வது போல பார்த்தார்.
"பார்த்தீர்களா, என் பிரதாபத்தை,
நான் சொல்ல வருவதை மக்கள்
மொழி புரியாவிட்டாலும்,
எப்படி வரவேற்கிறார்கள்
என்பதை, நீங்கள் தான்
என்னவோ உங்களுக்கு தான்
எழுத தெரியும் என்பதாக
உங்கள் பத்திரிக்கைகளில்
எதையாவது எழுதி மக்களை
குழப்பப் பார்கிறீர்கள்,
ஆனாலும் மக்கள் தெளிவாகவே
இருக்கிறார்கள்" என்பதாக
இருந்தது அவர் பார்வை.
பாதுகாவலர்கள் அவரருகே
வந்து, இருட்டி விட்டது.
ஓட்டலுக்கு திரும்பினால்
நலம் என்று சொல்ல. பிரதமர்
"மக்களே, உங்கள் பீடைகள்
ஒழிந்து, செல்வம் உங்கள்
காலடியில் கொட்டிக் கிடக்கும்
தருணம் வந்து விட்டது.
கிடந்துப் புரள தயாராகுங்கள்,
வணக்கம்" என்று சொல்ல,
மக்களோ "மலூங்கா, மலூங்கா,
என்று கைகளை உயர்த்தி
உயர்த்தி கத்தினார்கள்
தொண்டை நரம்புகள் கிழிய.
பிரதமர் அவர்கள பேரார்வத்துடன்
பார்த்து, அவர்களை கையமர்த்தி
அமைதியை உண்டாக்கி விட்டு
கிளம்பினார். பாதுகாவலர்கள்,
அவரை சூந்துக் கொண்டார்கள்.
அந்த மொழி பெயர்ப்பு
காவலனும் அவரை சூழ்ந்து
அவரை அழைத்து சென்றான்.
நன்றாக இருட்டி போய்
இருந்தது. பிரதமரும்
அவ்விருட்டில் தடுமாற
தான் வேண்டி இருந்தது.
ஒரு இடத்தை கடக்கும்
போது அந்த பாதுகாவலன்
சொன்னான், 'மிஸ்டர் பிரதமர்,
கொஞ்சம் உங்களை கால்களை
தரையில் பார்த்து வையுங்கள்,
வழியெல்லாம் மலூங்கா
போய் வைத்து இருக்கிறார்கள்"
என்று.
|
|
|