திருமணங்கள் முன்பெல்லாம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டன.
பின்பு அவை ரொக்கத்தில்
நிச்சயிக்கப்பட்டன. இன்றோ
ஏலத்தில் விடப்படுகின்றன.
நீங்களே பாருங்கள், இணைய
தளங்களில் பதிக்கப்பட்டுள்ள
திருமணத் தளங்களில்.....
ஆணின் பெண்ணின் புகைப்படங்களை
போட்டு, நான் இன்னவிதமாக
இருக்கிறேன், நீ என்னவிதமாக
இருக்கிறாய், நான் இன்னின்ன
படித்திருக்கிறேன், நீ
என்னென்ன படித்திருக்கிறாய்,
நான் இன்ன சம்பாதிக்கிறேன்,
நீ என்ன சம்பாதிக்கிறாய்
என்பதாக தான் கேள்விகள்
இருக்கின்றன. இவைகள்
பொருந்திப் போய் விட்டால்
வா! கெட்டி மேளம் கொட்டலாம்,
இல்லையா அப்பாலே போ ! என்பதாகதான்
இருக்கிறது. முன்னை காலங்கள்
போல் பெரியவர்களும் இல்லை.
அவர்களுக்கு தங்கள் உறவினர்
நண்பர்களிடமும் பெரிய
பிடிப்பு இல்லை. அதனால்
அவர்கள் தங்களுக்குள்
எந்த தொடர்புகளும் இல்லாமல்
மூன்றாவது இடத்தில வரன்
தேடுகின்றனர். வெறும்
வாய் பேச்சை நம்பி திருமணம்
முடித்து விட்டு பின்பு
அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதை தடுக்க என்ன வழி?