பாக்யலக்ஷ்மி, 30, இல்லத்தரசி.
விழுப்புரம், தமிழ்
நாடு.
பிறந்த ஊர். லால்குடி.
திருச்சி
வாழும் ஊர்.
விழுப்புரம்
கணவர்
பெயர். தனஞ்செயன். இந்த
பாக்யாவை
மனைவியை அடைந்ததால்
பாக்யவான் என்றும் சொல்லலாம்.
இந்த லால்குடி பெண்ணுக்கு
ஒரு பால்குடி பையன்.
ஆறு
மாத குழந்தை. பெயர் ஹரிசுதன்
என்கிற அமுதன். ஆராவமுதன்.
என் படிப்பு உயர்நிலை
வகுப்பு ( பிளஸ் 2 )
என் புகுந்த வீட்டில்
21 பேர் வாழ்கிறோம். கூட்டு
குடும்பம்.
அவர்களுக்கு
சேவை செய்வது என் உறுதியான
பொழுதுபோக்கு
பெரிய
பங்களா போன்ற வீடு. பெரிய
அறைகள்.
என் கணவர் வாஸ்து, திருமணங்கள், அதற்கு சமையல் ஏற்பாடு
செய்வது
போன்ற தொழில் செய்கிறார்.
நல்ல வருமானம்.
என்
கணவர் மிகவும் அன்பானவரும்,
அருமையானவரும் கூட.
என் கண் பார்பதை என
கைக் கொண்டு சேர்க்கும்
அளவுக்கு பிரியம் உள்ளவர்.
அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.
எங்கள் வீட்டில்
2 கம்ப்யுட்டர் மற்றும்
அலுவலகத்தில்
7 கம்ப்யுட்டர்களும்
உள்ளன. எங்கள் வீட்டின்
ஒரு பகுதியை ஒரு அறை மற்றும்
ஹால் நாங்கள் வீட்டு
அலுவலகமாய் உபயோகிக்கிறோம்.
அலுவலகம் வீட்டில்
இருந்து 2 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
அவசர
உபயோகத்திற்கு சுமோ
வைத்திருக்கிறோம்.
என்
கணவர் என்னை கம்ப்யூட்டர்
அருகில் அனுமதிப்பதில்லை.
எதாவது முக்கியமான
பைலை அழித்து விடுவேனோ
என்கிற பயத்தில்.
அப்புறம்
நானாகவே அவர் இல்லாத
நேரத்தில் அலுவலக பணியாள்
மூலமாக
கொஞ்சம் கொஞ்சமாக
கற்று கொண்டேன்.
இப்போதெல்லாம்
என்னை என் கணவர் ஏதாவது
முக்கியமான பைல்
இருந்தால் டைப் செய்ய
சொல்கிறார். ஆனால் பயந்துக்
கொண்டே.
அந்த பயத்தை
நானும் ரசிக்கிறேன்.
ஊரில் லால்குடியில்
அப்பா, அம்மா, அண்ணா அண்ணி
தங்கைகள் இருவர் இருக்கிறார்கள்.
அப்பா நில சுவான்தார்.
அண்ணன் டெக்ஸ்டைல்ஸ்
விநியோகம் செய்கிறார்.
தங்கைகள் படிக்கிறார்கள்.
நான் என் அக்காவின்
கணவரின் அண்ணனை தான்
திருமணம் செய்திருக்கிறேன்.
அவளும் நானும்
ஒரே வீட்டில் மருமகள்களாக
வாழ்கிறோம்.
மாமியார்
மெச்சும் மருமகள்களாக
வாழ்கிறோம்.
என் முதல் பெண் குழந்தையை
பிறந்த எட்டு மாதங்களில்
இழந்தேன்.
பின்பு தற்கொலைக்கு
முயன்றேன். என் குடும்பத்தினரால்
காப்பாற்றப்பட்டு
இன்று
அழகான ஆண் குழந்தைக்கு
தாயாக உள்ளேன்.
என் பிள்ளையை
என் கண்ணை விட்டு அகல
விடுவதில்லை.
அவனை என்
கண்ணுக்குள் வைத்து போற்றி
வளர்க்கிறேன்.